sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

20

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1090

சிறுத்தை தூக்கி சென்ற சிறுமிக்கு என்ன நேர்ந்தது

வீடியோ: பொது

20-Jun-2025

அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதனுடன் கேது இணைந்திருப்பதால் குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் என்றாலும், லாப ஸ்தானத்தில் குருபார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். வருமானத்தை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை விலக்குவார். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய வைப்பார். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற லாபம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். மாதத்தின் பிற்பகுதியில் சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 6, 7அதிர்ஷ்ட நாள்: ஜூன்16,18, 25, 27. ஜூலை 9,16பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும்.பரணி; நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற மனநிலை கொண்ட உங்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமான மாதம். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்க இருக்கிறார். தடைபட்ட வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குரு பகவானின் பார்வை 7,9,11ம் இடங்களுக்கு உண்டாவதால் நண்பர்களால் ஆதாயம் கூடும். நீண்ட நாளாக போக நினைத்திருந்த கோயில்களுக்கு போய் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் நம்பிக்கை உண்டாகும். சிறிய வேலைகளையும் முடிக்க முடியாமல் போராடி வந்தவர்களுக்கு பெரியோரின் ஆதரவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் அக்கறையும் இருக்கும். முயற்சிகள் வெற்றியாகும். பெண்களுக்கு குடும்ப நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை ஏற்படும். சேமிப்பு உயரும். உடல்நிலை சீராகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 7, 8.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நாராயணரை வழிபட நினைப்பது நடந்தேறும்.கார்த்திகை 1 ம் பாதம்; முயற்சியில் உறுதியாக இருந்து முன்னேற்றப் பாதையில் நடை பயிலும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்.  தடைபட்டிருந்த வேலைகள் ஒவ்வொன்றும் இந்த மாதத்தில் நடந்து முடிவிற்கு வரும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். ஜூன் 22 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தடைபட்ட வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் தொகை கைக்கு வரும். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் கூட்டுத் தொழில் லாபம் அடையும். நண்பர்கள் ஒத்துழைப்பர்.  குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு சொத்து சேரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நீண்ட நாளாக தள்ளிப்போன இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். புதிய பொறுப்பு கிடைக்கும். குடும்பத்தின் மீது அக்கறை கூடும். சிறு வியாபாரிகளின் நிலை உயரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். வம்பு வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடி தீரும்.  வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கையில் பணப்புழங்கும். குடும்பத்தினர் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 9.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, 28, ஜூலை 1, 10.பரிகாரம்: சுவாமிமலை முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ஞானக் காரகன் குருவுடன் இணைவதால் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கக்கூடிய வழி பிறக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். வியாபாரிகளுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்டு வந்த முயற்சிகள் இக்காலத்தில் வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்து, வாகனம் சேரும் என்றாலும், சுகஸ்தானத்தில் செவ்வாய் கேது இணைந்து சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். பெண்கள் நிலையில் இருந்த சங்கடங்கள், பிரச்னைகள் விலகி மனம் தெளிவடையும்.சந்திராஷ்டமம்: ஜூலை 9.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28, ஜூலை 1, 6, 10, 15பரிகாரம்: சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ரோகிணிபுத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 6, 8, 10 ம் இடங்களைப் பார்ப்பதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் உண்டான தடைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.  உத்தியோகத்தில் ஏற்பட்டு வந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக தொடர்ந்து முயற்சி செய்தும் தடைகளையே சந்தித்து வந்தவர்களுக்கு இக்காலம் யோக காலமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிக்கிடையே இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.  சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்டு வந்த பாதிப்பு விலகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 10.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 24, 29. ஜூலை 2, 6, 11, 15.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்துணிச்சலுடன் செயல்பட்டு  சாதனை படைக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் லாபமான மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாயும், ஞான மோட்ச காரகனான கேதுவும் சுகஸ்தானத்தில் சஞ்சரித்து உடல் நிலையில் சின்னச் சின்ன சங்கடங்களை ஏற்படுத்தி வந்தாலும், தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் அதிர்ஷ்டக்காரன் சுக்கிரனும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தடைபட்டு வந்த வேலைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள், மறைமுக எதிர்ப்பு விலகும். நினைத்ததை சாதிக்கும் காலமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியை தரும். வர வேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். நீண்ட கால முயற்சிகள் இக்காலத்தில் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையுடன் புதிய இடம் வீடு வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் உழைப்பிற்கேற்ற ஆதாயத்தை இக்காலத்தில் காண முடியும். பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும். நெருக்கடி விலகும். வரவு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 11.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடக்கும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாயும், ஞான மோட்சக் காரகன் கேதுவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரையில் உங்களுக்குள் இருந்த தயக்கம், சோர்வு, பயம் உங்களை விட்டு விலகும். உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் கிடைக்கும். எடுத்த வேலைகளை முடித்திடக் கூடிய சக்தி உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். ஜூலை 3 வரை புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விரும்பிய இடத்தை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் மேலதிகாரியின் வழிகாட்டுதலும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 11.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.பரிகாரம்: கந்தசுவாமியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.திருவாதிரைஉறுதியுடன் செயல்பட்டு நினைத்ததை அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். குரு பார்வையுடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சனியும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அளிப்பர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தடைபட்டு வந்த வேலைகள் இனி வேகமாக நடந்தேறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பணநெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவர். அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உழைப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். சுயதொழில் செய்பவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 15, ஜூலை 12.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23. ஜூலை 4, 5, 13, 14.பரிகாரம்: காளியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டும் வகையில் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். ஞானக் காரகன் குரு ராசிக்குள் சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார். இதுவரை வெறும் கனமாகவே இருந்த யாவும் இனி நனவாகும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருந்தவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனிக்கு குருவின் பார்வை உண்டாவதால் இறையருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் சிலர் தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காக வெளியூரில் தங்குவீர்கள். குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடல் நிலையில் உண்டான பாதிப்பு நீங்கும். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். விவசாயம் முன்னேற்றம் அடையும். வயதானவர்களுக்கு இருந்த பாதிப்புகள் நீங்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16. ஜூலை 13.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 3, 5, 12, 14.பரிகாரம்: முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்

புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் அவை யாவும் சுபச் செலவுகளாகவே இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சிலர் இடம், வீடு என புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குருவின் பார்வைகள் 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலைகள் மாறும். அஷ்டம சனியும், ராகுவும் வழங்கி வந்த சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக் கொள்ள முடியும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வரவு செலவிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னதாக நன்றாக யோசிக்கவும். பணியாளர்கள் தங்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தாலும் மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவதும், வேலையில் நேர்மையாக இருப்பதும் இக்காலத்தில் அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூன் 16, ஜூலை 13.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30, ஜூலை 2, 3, 11, 12.பரிகாரம்: தத்தாத்ரேயரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.பூசம்மனதில் வலிமையும், நினைத்ததை சாதிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதம். கர்மக்காரகன் சனி ஜூலை 2 முதல் வக்கிரமாவதால் அவரால் உண்டான பாதிப்பு இனி விலகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகுவிற்கும் குருபார்வை உண்டாவதால் உங்களை வாட்டி வதைத்து வந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகளை உண்டாக்குவார். சிலருக்கு திடீர் இட மாற்றத்தையும் ஏற்படுத்துவார். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்ற கவலை உண்டாகும். இக்காலத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிப்பது நன்மையாகும். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடிகளை சிலர் சந்திக்க நேரும். அரசியல்வாதிகளுக்கு இக்காலம் போராட்ட காலமாக இருக்கும். நீங்கள் பெரியதாக நம்பியவர்களும் இக்காலத்தில் உங்களைக் கண்டு கொள்ளாமல் போகலாம். எதிர்பார்ப்பு இழுபறியாகலாம் என்பதால் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. கையிருப்பு ஏதேனும் ஒரு வகையில் கரைவதற்கு வாய்ப்பிருப்பதால் அசையா சொத்து, பொன், பொருள் வாங்குவது நன்மையாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையை அதிகரிக்கும். ஆறாமிடத்திற்கு குருபார்வை உண்டாவதால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17. ஜூலை 14.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 26, 29. ஜூலை 2, 8, 11.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட நினைப்பது நடந்தேறும். ஆயில்யம்பொறுப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடையும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் உழைப்பால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். ஜூன் 22 வரை புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் மாதம் முழுவதும் குரு, சூரியனும் அங்கு சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு ஏற்படும். மனதில் நிம்மதி என்பது இக்காலத்தில் இல்லாமல் போகும். நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செலவுகளும் பிரச்னைகளும தோன்றும். ஜூன் 22 முதல் ஜென்ம ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் போராட்ட நிலை மாறும். திடீர் பயணங்கள் ஏற்பட்டாலும் அதன் வழியாக உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விரய குருவின் பார்வைகள் சுக, சத்ரு,  அஷ்டம ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். இக்காலம் உங்களுக்கொரு சவாலான காலமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் இக்காலத்தில் அதிகபட்ச எதிர்பார்ப்பு வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் முன்பிருந்த பாதிப்பு குறையும். பிறரால் ஏற்பட்ட அவமானம், நெருக்கடி விலகும். உங்கள் தனித்தன்மையும் செல்வாக்கும் வெளிப்படும். சமூகத்தில் உங்களுக்குரிய அந்தஸ்தை அடைவீர்கள். தனியார் நிறுவன பணியாளர்கள் தங்கள் வேலையில்  கவனம் செலுத்துவது நல்லது.  தேவைக்கேற்ற பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18, ஜூலை 15.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29, ஜூலை 2, 5, 11, 14.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை யாவும் தீரும்.

மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் கேதுவும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ஏதோ ஒன்றை இழந்தது போல் மனம் தவிக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். பெண்களுக்கு உடல் நிலையில் சங்கடங்கள் தோன்றி மறையும். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். ஜூன் 22 வரை புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருபார்வை ஏற்படுவதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19, ஜூலை 16.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28, ஜூலை 1, 7, 10.பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரம்நினைத்ததை சாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதம். லாப ஸ்தானத்தில் ராசிநாதனும் ஞானக்காரகன் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவற்றிலும் வெற்றி ஏற்படும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட வேலைகள் வெற்றியாகும். ஜூன் 29 முதல் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் வரும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேதுவும், தைரிய வீரிய காரகன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு வம்பை நீங்களே விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். எதிர்பாராத பிரச்னைகள் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். அதே நேரத்தில் குரு பகவானின் பார்வை 3, 5, 7 ம் இடங்களுக்கு உண்டாவதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். என்ன வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.  பணியாளர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். பெண்கள் சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகள் தோன்றி சங்கடப்படுத்தும்.சந்திராஷ்டமம்: ஜூன் 19, 20.அதிர்ஷட நாள்: ஜூன் 15, 24, 28. ஜூலை 1, 6, 10, 15.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் யாவும் மறையும். உத்திரம் 1 ம் பாதம்வெற்றி ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிநாதனும், நட்சத்திர அதிபதியுமான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். கடன் தொல்லை மறையும்.  சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக தவமிருந்தவர்களின் ஏக்கம் தீரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு லாபஸ்தான குருவின் பார்வை உண்டாவதால் நண்பரால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஜென்ம ராசிக்குள் செவ்வாயும், கேதுவும் சந்திப்பதால் செயல்களில் தடை, நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும். இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு உங்களை நீங்களே சங்கடப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். இளம் வயதினர் சிலருக்கு காதலால் பிரச்னைகள் தோன்றும். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் ஏற்படும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பணியாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 20.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 28. ஜூலை 1, 10.பரிகாரம்: நன்மை தருவாரை வழிபட நினைத்தது நிறைவேறும். 

உத்திரம் 2, 3, 4 ம் பாதம் தெளிவாக சிந்தித்து உறுதியாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி யோகமான மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் வளர்ச்சி பெறும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஜூலை 3 வரை ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். விரய ஸ்தானத்தில் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவில் கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சலில் முழுமையான கவனத்தையும் செலுத்தி வருவது நன்மை தரும். சீருடை பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகள் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 20, 21.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28, ஜூலை 1, 5, 10, 14.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.அஸ்தம்மன வலிமையுடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். குருபகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடன் சஞ்சரிக்கும் சூரியனால் பதவியில் ஏற்படும் நெருக்கடி விலகும். குருவின் பார்வைகள் தன, குடும்ப, வாக்கு, சுக,  சத்ரு ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். ராகு, சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகளை உங்களால் முடித்து விட முடியும். அதற்கேற்ப ஆதாயமும் உண்டாகும். செல்வாக்கும் உயரும். அரசியல்வாதிகளுக்கு இது முன்னேற்றமான காலம். புதிய பொறுப்பு, பதவி என ஒரு சிலருக்கு கிடைக்கும். ராசிநாதன் ஜூலை 3 வரை சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உடல்நலனில் அக்கறை தேவை. எதிர்பாராத செலவு சிலருக்கு ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 21, 22.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 5, 11, 14.பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்துணிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசி அதிபதி ஜூலை 3 வரை சாதகமாக சஞ்சரித்து நன்மை வழங்கினாலும், மாதம் முழுவதும் நட்சத்திராதிபதி செவ்வாய், கேதுவுடன் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏதாவது ஒரு வகையில் செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வரவு வரும் போதே அதற்காக செலவும் காத்துக் கொண்டிருக்கும். 10ல் சஞ்சரிக்கும் சூரியனும், 6ம் இடத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். வசதி வாய்ப்பை அதிகரிப்பார்கள். கவுரவத்தை உண்டாக்குவர். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் லாபம் அடையும். தொழிலில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகள் சாதகமாகும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். வழக்கு சாதகமாகும். மனம் நிம்மதி பெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். பெண்களின் மனதில் இருந்த குறைகள் விலகும். உடல் பாதிப்பு நீங்கும். பணியில் உயர்வு உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 22. அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், கேதுவும் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார்கள். பணவரவை அதிகரிப்பர். செய்து வரும் வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவர். முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணியாளர்கள் ஒத்துழைப்பிற்கு வழிகாட்டுவர். வரவேண்டிய பணம் வரும். விவசாயம், மருத்துவம், கெமிக்கல் உணவகத் தொழில்கள் முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஐந்தாம் இடத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருந்தவர்களின் ஏக்கம் நிறைவேறும்.  குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். பெண்களின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட நன்மை உண்டாகும்.சுவாதிஎங்கும் எதிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்கிய குருவின் பார்வையுடன் ஐந்தாம் இடத்தில் ராகுவும், சனியும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு புது இடம், வீடு வாங்கும் யோகம் தோன்றும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் இக்காலத்தில் உங்களின் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை  சாதிக்கும் நிலை உண்டாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேதுவால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். வருமானம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். கடன்காரர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், குழப்பங்கள் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ஜூன் 29 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து எதிர்பாலினரால் சங்கடங்களை உண்டாக்கி வந்தாலும் அதன் பிறகு உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துவார். பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயத்தில் லாபம் உண்டாகும். உழைப்பாளர்கள் சங்கடம் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, ஜூலை 4, 6, 13, 15.பரிகாரம்: பத்ரகாளியை வழிபட சங்கடங்கள் நீங்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி முன்னேற்றமான மாதமாகும். ஞானகாரகன் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்களின் நிலை மாறும். உங்களின் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். முயற்சி ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சனியை குரு பார்ப்பதால் இதுவரை குடும்பத்தில் இருந்த நெருக்கடி, பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்தில் உண்டான தகராறு யாவும் விலகும். விருப்பம் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, செவ்வாயால் வருமானம் உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களின் நீண்டநாள் கனவு நனவாகும். தனியார் நிறுவனத்தில் பயத்துடன் பணியாற்றி வந்தவர்களின் பயம் போகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 24.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 30, ஜூலை 3, 6, 12, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம் கால நேரம் அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திராதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பின்விளைவு பற்றி யோசித்து முடிவிற்கு வர வேண்டும். அவசர வேலைகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் விரயச்செலவு கட்டுப்படும்.  குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் பாதிப்புகள் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேதுவால் வியாபாரம் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். அரசுவழியில் நெருக்கடி, சங்கடம், பிரச்னை தோன்ற வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு இக்காலத்தில் பாதிப்புண்டாகும். வழக்கை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அரசு பணியாளர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும்,  விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மனதில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 25.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30. ஜூலை 3, 9, 12.பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.அனுஷம்தைரியம் வீரியம் துணிவு மூலம் எடுத்த வேலைகளை முடிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திர அதிபதி சனி சுகஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரித்தாலும் குருவின் பார்வை அங்கு உண்டாவதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் விலகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். அஷ்டம குருவின் பார்வைகளால் செலவுகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் விவசாயம், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதத்தின் தொடக்கத்தில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகள் முடியும். பொருளாதார நிலை உயரும். உறவினர்களின் ஆதரவு உண்டாகும். வேலைகளில் இருந்த நெருக்கடி குறையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடங்கள் விலகும்.கேட்டைஎடுத்த வேலையை முடித்திடக்கூடிய திறமை பெற்ற உங்களுக்கு, ஆனி யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி புதன் ஜூன் 22 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விற்க நினைத்தவற்றை விற்கவும் வழி பிறக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் உடலில் ஏற்பட்ட சோர்வு நீங்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர்கள் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது இக்காலத்தில் அவசியம். முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உங்கள் தசா புத்தி சாதகமாக இருந்தால் பாதிப்பு ஏற்படாமல் போகும். பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.

மூலம்தெளிந்த சிந்தனையும், வாழ்வின் போக்கும் தெரிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். ஞான மோட்சக் காரகன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். மனதில் இருந்த சங்கடம் விலகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் சிலர் தங்கள் வெளியூரில் தொழிலை விரிவுபடுத்துவர். சிலர் வசிக்கும் ஊரை விட்டு வேலையின் காரணமாக வெளியூரில் குடியேறுவர். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் கூடும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். ஜூன் 29 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வரவு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30. ஜூலை 3, 7, 12.பரிகாரம்: ஐயப்பனை வழிபட நன்மைகள் நடந்தேறும்.பூராடம்முன்னேற்றத்தை நோக்கி வெற்றி நடைபோடும் உங்களுக்கு ஆனி யோகமான மாதம். முயற்சி ஸ்தானத்தில் ராசிநாதன் குருவின் பார்வையுடன் சனி, ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியம் நடந்தேறும். தடைபட்ட முயற்சிகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்திற்கும் ஜென்ம ராசிக்கும் குருபார்வை உண்டாவதால் பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் வெளிப்படும். இத்தனை நாட்களும் உங்களை ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உயர்வாக பார்க்கும் நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். மண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் மறுமண வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதன் சாதகமாக இருப்பதால் வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 28, 29.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 12, 15.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்உயர்வை நோக்கி நடை போட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதம். உங்கள் நட்சத்திராதிபதியும், ராசியாதிபதியும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரை இருந்த பிரச்னைகள், சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளி விலகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் செயல்களை லாபமாக்குவர். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவர். இந்த மாதம் உங்களுக்கு பெரிய யோகமானதாக இருக்கும். நெருக்கடி விலகும். சேமிப்பு உயரும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். முதியவர்களுக்கு உடல்நிலையிலும், மன நிலையிலும் இருந்த சங்கடம் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 29.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 21, 28, 30. ஜூலை 1, 3, 10, 12.பரிகாரம்: சிவபெருமானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்எங்கும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என வாழ்ந்து வரும் உங்களுக்கு ஆனி யோகமான மாதம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ஆத்மகாரகனால் நெருக்கடி யாவும் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ளும் அளவிற்கு நிலை மாறும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலில் கவனம் செல்லும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். சிலருக்கு சொத்து சேரும். பொன், பொருள், நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூன் 29.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 19, 26, 28. ஜூலை 1, 8, 10.பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.திருவோணம்எதிலும் தெளிவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் ஞானக்காரகனின் பார்வை அங்கு உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் வகையில் செலவு ஏற்படும். தொழிலில் கூடுதல் அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஆத்ம காரகன் சூரியன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சங்கடத்திலும் ஒரு நன்மை உண்டாவது போல் உங்கள் நிலையில் இக்காலத்தில் நன்மை அதிகரிக்கும். வம்பு, வழக்குகள், பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிரி தொல்லை விலகும். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலர் அவமானத்தை சந்திக்க நேரும். வாகனத்தை இயக்கும் போதும், இயந்திரப்பணியில் இருக்கும் போதும் கவனமாக செயல்படுவது அவசியம். சிலருக்கு ஒவ்வாமை, தொற்று  ஏற்பட வாய்ப்புண்டு.  குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு ஏற்பட்ட தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் இருக்கும். சந்திராஷ்டமம்: ஜூன் 30.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29. ஜூலை 2, 8, 11.பரிகாரம்: பைரவரை வழிபட உடல்நிலை சீராகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரனான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் எதிர்பாராத சங்கடம், நெருக்கடி ஏற்படும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். வீண் பிரச்னைகள், வழக்குகள் உண்டாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களைப் பாதுகாப்பார். அரசு வழி முயற்சிகளை சாதகமாக்குவார். வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்ப்பு போட்டி என்றிருந்த நிலைகளை மாற்றுவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை,  பாதிப்பு,  வழக்குகளை இல்லாமல் செய்வார். சங்கடத்தோடு வாழ்ந்தவர்களையும் நிமிர்ந்து நடை போட வைப்பார். இந்த நேரத்தில் புதனின் சஞ்சாரம் ஜூன் 22 வரை சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். பணவரவு அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உறவினர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் முடியும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 1.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: வீரபத்திரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு  ஆனி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். சப்தம ஸ்தானத்தில் நட்சத்திராதிபதி செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்குள் சிறு பிரச்னைகள் ஏற்படும். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடிய நிலை ஏற்படும். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையில் முடிவு ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வார்த்தைக்கு மதிப்புண்டாகும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். உங்கள் முகத்தில் இருந்த கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைக்குரிய பாதை தெரியும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் தோன்றிய தடைகள் விலகும். பெண்களின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உழைப்பாளர் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 1.அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 18, 26, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: அனுமனை வழிபட நன்மை உண்டாகும்.சதயம் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்து நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் ராகு, சனி சஞ்சரித்து நெருக்கடிகளை அதிகரித்தாலும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் அவையெல்லாம் உங்களை நெருங்காமல் போகும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகளும், போராட்ட நிலையும் மறையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். சரியான நேரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். வேண்டுதலை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உடல்நிலையில் தெளிவு ஏற்படும். சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் பணம் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 2, 3.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 22, 26. ஜூலை. 4, 8, 13.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்குருவின் அருள் பெற்று உயர்வு காணும் வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி யோகமான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞானக்காரகன் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்பனையில் ஏற்பட்டிருந்த மந்தநிலை மாறும். தொழில் வளர்ச்சி பெறும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியடையும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். ஏழாம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் சஞ்சரிப்பதால் நட்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச் செல்வது அவசியம். கூட்டுத் தொழிலில் உங்கள் நேரடிப் பார்வை இருந்தால் எதிர்பார்த்த லாபம் காண முடியும். பணியாளர்கள் தங்களுடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். சந்திராஷ்டமம்: ஜூலை 3, 4.அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 21, 26, 30. ஜூலை. 8, 12.பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4 ம் பாதம்கவுரவத்தை முன்னிறுத்தி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி யோகமான மாதமாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் யாவும் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், நெருக்கடிகள் காணாமல் போகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். செய்து வரும் தொழில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விரயங்கள் கட்டுக்குள் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.  சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 4.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12.பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மைகள் உண்டாகும்.உத்திரட்டாதிமனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு ஆனி அதிர்ஷ்டமான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரித்தாலும் ராசிநாதனின் சுபப்பார்வை அங்கு உண்டாவதால் அவர்களால் ஏற்படும் நெருக்கடிகள் உங்களை நெருங்காமல் போகும். இதுவரை சந்தித்த போராட்டம், சங்கடங்கள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். நிம்மதியாக துாங்கிடும் அளவிற்கு எல்லாமும் மாறும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேது உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். உடல் பாதிப்பு, நெருக்கடி  இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு மறையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். முகம் பொலிவடையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அந்நியரால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும். உழவுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 5.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.ரேவதிபுத்திசாலித்தனம், நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு ஆனி மாதம் நன்மையான மாதம். ஜூன் 22 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார்கள். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்கள். செல்வாக்கை உயர்த்துவார்கள். இதுநாள்வரை பிறருக்காக வாழ்ந்த நீங்கள் இனி உங்களுக்காக வாழத் தொடங்குவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை கிடைப்பதால் விரயம் கட்டுப்படும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே செலவு செய்வீர்கள். சேமிப்பு உயரும். மனதில் நிம்மதி ஏற்படும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். விவசாயம், வியாபாரம், சுயதொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பதவி உயர்விற்கு தடையாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 6.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை. 3, 5, 12.பரிகாரம்: ஆண்டாள் வழிபாட்டால் நன்மைகள் பெருகும். 


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us