சூட்டோடு சூடாக 'அப்டேட்' கொடுத்த 'டேர் டெவில்'
அரசியல் உலகில் மட்டுமல்லாது, சினிமா உலகிலும் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது தமிழக முதல்வர் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் லண்டன் சந்திப்பு. கடந்த 25 வருடங்களாக சினிமா உலகில் எதிரெதிர் துருவங்களாக இருந்தவர்களது திடீர் சந்திப்பும், நெருக்கமும் அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கவே விஜய் இப்படிச் செய்தார் என்றும், தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஸ்பான்சர்களின் கவனத்தை ஈர்க்கவே அஜித் இப்படிச் செய்தார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்த பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பாகவே, அஜித் அடுத்து நடிக்க உள்ள 'டேர் டெவில்' படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி நவம்பர் 2ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று அறிவித்துள்ளார்கள். அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு நாளுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே இந்த அறிவிப்பு வெளியானது ஏன் என்பதும் குறித்தும் திரையுலகில் கேள்விகள் எழுந்துள்ளது.