sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு

/

சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு

சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு

சமூகச் செயற்பாட்டாளருடனான சந்திப்பு


ஆக 06, 2025

Google News

ஆக 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த சமூகச் செயற்பாட்டாளர் பெ. மணியரசனுடனான சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தொலிக்க நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் சின்னத்தம்பி வரவேற்புரை வழங்க, இயக்குனர் குழு தலைவர் கோகுல் ராசேந்திரன் முன்னுரை வழங்கினார். துணைத்தலைவர் மருதயாழினி பிரதீப், மணியரசனை அறிமுகம் செய்து வைத்தார்.

பெ. மணியரசன் ஐயா 'அயலகத்தில் அன்னைத் தமிழ்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரின் ஆழமான சிந்தனையும், இடை இடையே கலந்த நகைச்சுவையும், பங்கேற்ற அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் சங்க செயல்பாட்டாளர்கள் பெ. மணியரசனுக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கினர்.நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க உழைத்த சங்க செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உதவிய எல்லோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொடுத்து, தொழில்நுட்ப உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சி, அட்லாண்டாவில் உள்ள தமிழ்ச் சொந்தங்களின் ஒற்றுமையையும், தமிழ்ப் பண்பாட்டின் மீதான அன்பையும் வெளிப்படுத்தும் ஓர் அழகான நினைவாக அமைந்தது என்பதை நிறைவோடு கூறிக்கொள்கிறோம்.


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us