PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில், சித்தர் மயாண்டியின் கனவு வழியாக உருவான புண்ணிய தலம். இது பக்தர்களுக்கு அமைதி, நம்பிக்கை மற்றும் அன்பை வழங்கும் திருத்தலமாக விளங்குகிறது.
இந்தக் கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் சிறப்பானது.
இந்த அற்புத ஓவியங்களை வரைந்து தருபவர் சந்தோஷ் கோபால். இவரது பூர்வீகம் கேரளா; தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் வசிக்கிறார்.
'கற்ற கலையை விட்டுவிடக் கூடாது' என்ற எண்ணத்தால், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில், வருமானத்திற்காக அல்லாது, மனநிறைவுக்காகவே ஓவியங்களை வரைந்து வருகிறார்.
தொலைபேசி: 98941 38045படங்கள்: செந்தில் விநாயகம்- எல். முருகராஜ்