sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

தாலிக்கயிறு தயராகிறது வடசென்னையில்...

/

தாலிக்கயிறு தயராகிறது வடசென்னையில்...

தாலிக்கயிறு தயராகிறது வடசென்னையில்...

தாலிக்கயிறு தயராகிறது வடசென்னையில்...


PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாலிக்கயிறு, தமிழர் வாழ்க்கைமுறை மற்றும் திருமண மரபுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இது வெறும் கயிறல்ல; நம்பிக்கையின், பாசத்தின், குடும்ப உறவின் புனித மிகு அடையாளமாகும்.

இந்தக் கயிறை தயாரிக்கும் பாரம்பரியக் கலைஞர்களில் ஒருவர்தான் தர்மராஜ். அவர் வடசென்னை கேகேடி நகர், அகத்தியர் தெருவில் வசிக்கிறார்.

தாலிக்கயிறு வேறு, அரைஞான் கயிறு வேறு, கோவில்களில் இலவசமாக தாலிக்கயிறைப் போலக் கொடுக்கப்படும் மஞ்சள் கயிறு வேறு.Image 1455208கோவில்களில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிறு பெரும்பாலும் யாருடைய கழுத்தளவிற்கும் போதாது. அது குங்குமத்துடன் ஒரு சாங்கீதிகச் சின்னமாக வழங்கப்படும் ஒன்று. அசல் தாலிக்கயிற்றின் விலையில் பத்தில் ஒரு பங்குதான் அதன் விலை.

அசல் கயிற்றில் தங்கத் தாலி மட்டுமின்றி பவளம், குண்டு, குழல் போன்ற பலவற்றையும் சேர்ப்பர். அவற்றின் எடையையும் தாங்கும்வகையில் நாங்கள் தயாரிக்கும் தாலிக்கயிறு இருக்கும்.

வெளியூரிலிருந்து இதற்கென தனி நூல் வரவழைத்து, அதை நெசவு போல நேர்த்தியாக பிரித்து பின்ன வேண்டும். பின்னியதை தரமான மஞ்சளில் முழ்கவைத்து காயவைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் காய்ந்த பிறகு, வெவ்வேறு அளவுகளில் வெட்டி மொத்த விற்பனைக்கடைகளுக்கு கொடுத்து விடுவோம்; அவர்கள் அதை விற்பர்.

எவ்வளவு சரக்கு தயாரித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வர். ஆகவே வருடம் முழுவதும் தாலிக்கயிறு தயாரிப்பில் ஈடுபடுவோம். மழை நேரத்தில் காயவைக்க சற்று சிரமம் இருக்கும். ஆடி மாதத்தில் எங்கள் சரக்குக்கு மிகவும் அதிகமான தேவை இருக்கும்; அப்போது டீ குடிக்க கூட நேரமின்றி உழைப்போம்.Image 1455209எங்கள் உழைப்பிற்கும் தயாரிப்பிற்கும் ஏற்ற வருவாய் கிடைக்கிறது. எங்களிடம் வாங்கி எவ்வளவு விற்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது; தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. எங்கள் தெருவில் நானும், எனது உறவினர்களும் என வெகுசிலர்தான் தாலிக்கயிறு தயாரிப்பில் உள்ளோம்.

இது கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டிய தொழில். எங்கள் குடும்பத்தில் தாத்தா, அப்பா, இப்போது நான் — இப்படியாக இந்த தாலிக்கயிறு தயாரிப்பில் இருக்கிறோம். என் பிள்ளைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் என் தொழிலைத் தொடர்ந்து செய்வார்களா என்பது காலம்தான் சொல்ல வேண்டும்.

படங்கள்: லட்சுமணன்






      Dinamalar
      Follow us