sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

ரௌத்ர வீணை

/

ரவுத்திர வீணை!

/

ரவுத்திர வீணை!

ரவுத்திர வீணை!

ரவுத்திர வீணை!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...

நான் ஜானகி. பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் மனைவி!

தமிழக மின்வாரியத்தின் வடபெரும்பாக்கம் துணை மின்நிலைய மின் கம்பியாளரா பணியாற்றின என் கணவர், நவம்பர் 6, 2023ல் பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்துட்டார். ஆறுதல் சொல்ல வந்த மின்வாரிய அதிகாரிகள் தரப்புல, நிவாரணம், பணிக்கால பணப்பலன்களுக்கு வாய் வார்த்தையா உத்தரவாதம் கிடைச்சது!

ஒரு வருஷமாச்சு... இதுவரைக்கும் எந்த நிவாரணமும், பணிக்கால பலன்களும் வரலை. பட்டதாரியான இளைய மகனுக்காக கேட்ட, 'கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ்' இந்த ஆகஸ்ட் 22ம் தேதி பொன்னேரி வட்டாட்சியர் கையெழுத்தோட கிடைச்சிருக்கு! பணி எப்போ கிடைக்கும்னு அந்த கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம்!

அது எப்படிங்க... என் கணவர் இறந்த அடுத்த மாசம், துாத்துக்குடி கனமழையில் சேதமான மின்கம்ப பராமரிப்புல உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு மட்டும் உடனே இரங்கல் சொல்லி, ரூ. 5 லட்சம் நிவாரணம் தந்தீங்க?

'அரசு ஊழியர்தான் அரசு'ங்கிற உங்க கருத்துல இன்னும் உறுதியா இருக்குறீங்களா?

- பணியின்போது மின்சாரம் தாக்கி கணவர் ஏழுமலை பலியாக நிவாரணம் மற்றும் பணிக்கால பலன்களுக்காகப் போராடும் மனைவி ஜானகி, ஆமூர், பொன்னேரி, திருவள்ளூர்.






      Dinamalar
      Follow us