sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்

/

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம்


ADDED : ஆக 29, 2025 06:45 AM

Google News

ADDED : ஆக 29, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் ஜப்பான் பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஏற்படுத்தியுள்ளது.

கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா அழைப்பின் பேரில், பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இது மோடி பிரதமராக ஜப்பானுக்கு மேற்கொள்ளும் எட்டாவது பயணமாகும். இப்பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் எதிர்காலம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது-.

மேலும், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தாண்டி, இந்தியாவின் எதிர்கால புல்லட் ரயில் திட்டங்களில் ஜப்பானின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பான் சென்றுள்ள மோடி, ஜப்பான் பிரதமருடன் 15வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடனான முதல் ஆண்டு உச்சி மாநாடாகும்.

மேலும், பிரதமர் மோடி ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கு செல்லும் முதல் தனி பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டில், உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது-.

சீனாவில் குவியும் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் வென்றதைக் குறிக்கும் வகையில், செப்., 3ம் தேதி வெற்றி தினம் என்ற பெயரில் சீனா கொண்டாடி வருகிறது. இதன், 80வது ஆண்டு என்பதால், இந்த ஆண்டு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு உள்ளிட்டவை நடக்க உள்ளது. சர்வதேச அரசியலில் பதற்றம், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு இடையே இந்தாண்டு நடக்கும் வெற்றி தினத்துக்கு, பல நாட்டுத் தலைவர்களை, சீன அதிபர் ஷீ ஜின்பிங் அழைத்துள்ளார். அதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட்பட, 26 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஈரான் அதிபர் மசூத் பெஸஷ்கியான் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதில், பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.



ஜப்பான் பயணத்தின் முக்கியத்துவம்

* மும்பை - ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம்
* இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதிலும், ஜப்பானின் 'ஷிங்கான்சென்' தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது
* அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களால், ஜப்பானுடனான உறவை வலுப்படுத்துவது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது
* இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது
* இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் கூட்டமைப்பான 'குவாட்' எதிர்காலம் குறித்து ஆலோசனை.



முக்கியத்துவம் பெறுகிறது ஷாங்காய் உச்சி மாநாடு

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, சீனாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு, வரும், 31 மற்றும் செப்.,1ல் நடக்கும் ஷாங்காய் உச்ச மாநாட்டில் பங்கேற்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனாவுக்கு அவர் பயணம் செய்கிறார். அமெரிக்காவின் வரி விதிப்பு பதற்றத்தால், சர்வதேச அரசியல் நிலவரம் மாறி வருகிறது. குறிப்பாக, சீனாவுடனான உறவு கடந்த சில மாதங்களில் மேம்பட்டுள்ளது. இதனால், மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார்.








      Dinamalar
      Follow us