sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

/

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

1


ADDED : ஆக 29, 2025 03:55 PM

Google News

1

ADDED : ஆக 29, 2025 03:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் வகையில், கம்போடிய முன்னாள் பிரதமரும், செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் கலந்துரையாடினார். அப்போது, அவரை 'அங்கிள்' என அழைத்ததுடன், தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசியிருந்தார். மேலும், எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். அது குறித்து கவனம் செலுத்துகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த உரையாடல் வெளியில் கசிந்தது. இதனால், அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா மன்னிப்பு கேட்டதுடன், பதற்றத்தை தணிப்பதற்காக அப்படி பேசியதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டியதுடன், வழக்கு தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று ( ஆக.,29) அவரை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கி அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தின் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா, கடந்த 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பிரதமர் ஆக பதவியேற்றார். இதன் மூலம் அந்நாட்டில் இளம் வயதில் பிரதமர் ஆக பதவியேற்றவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருந்தது. ஓராண்டு மட்டுமே பதவியில் இருந்த நிலையில், தொலைபேசி உரயைாடல் கசிந்த நிலையில், அவரது பதவி பறிபோனது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us