sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்.,கில் கனமழைக்கு 154 பேர் உயிரிழப்பு

/

பாக்.,கில் கனமழைக்கு 154 பேர் உயிரிழப்பு

பாக்.,கில் கனமழைக்கு 154 பேர் உயிரிழப்பு

பாக்.,கில் கனமழைக்கு 154 பேர் உயிரிழப்பு


ADDED : ஆக 16, 2025 12:26 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையில், 154 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு மாதமாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லோயர் டிர், பஜவுர், அபோட்டாபாத், ஜப்ராரி, சலார்சாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாய்கிறது.

வீடுகள் இடிந்து விழுந்ததில், அந்த பகுதிகளில் குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதேபோன்று பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள கிசர் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் இறந்தனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன.

பஞ்ச்கோரா, ஜீலம் உள்ளிட்ட நதிகளில், அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால், கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஜீலம் பள்ளத்தாக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்; 600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணியர் வெளியேற முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை, 154 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us