sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

/

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

2


ADDED : செப் 17, 2025 11:34 AM

Google News

2

ADDED : செப் 17, 2025 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டைமானின் துணிச்சலும்,ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே என்று பாமக தலைவர் அன்புமணி பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

நேபாளத்தில் தலைவிரித்தாடிய ஆட்சியாளர்களுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் போராட்டத்தின் போது, தலைநகர் காத்மாண்டுவில் தீயிட்டு எரிக்கப்பட்ட நட்சத்திர விடுதியில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 5 பேரை, அதே விடுதியில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் காப்பாற்றியதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது துணிச்சலான செயலை நானும் பாராட்டுகிறேன்.

காத்மண்டு கலவரத்தில் எரிந்து கொண்டிருக்கும் விடுதியில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றுவது மிகவும் ஆபத்தானது என தெரிந்தும், விடுதி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியர்களைக் காப்பாற்றி வெளிக்கொண்டு வந்த செந்தில் தொண்டைமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே. அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us