sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏழு மாதங்களில் 'ரேபிஸ்' நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

/

ஏழு மாதங்களில் 'ரேபிஸ்' நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

ஏழு மாதங்களில் 'ரேபிஸ்' நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

ஏழு மாதங்களில் 'ரேபிஸ்' நோயால் 20 பேர் உயிரிழப்பு: நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

7


ADDED : ஆக 15, 2025 09:21 PM

Google News

ADDED : ஆக 15, 2025 09:21 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தமிழகத்தில் ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 'ரேபிஸ்' நோயால், 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடிக்கான தடுப்பூசி போட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து, மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் ஏற்படக்கூடிய, 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காக்க, தடுப்பூசி மட்டும் ஒரே தீர்வாக உள்ளது.

எனினும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதற்கு தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.இந்த ஆண்டில் இதுவரை 3.67 லட்சம் பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 20 பேர் ரேபிஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேபிஸ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர்.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாய்க்கடி காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது. ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, சிகிச்சை பெற வேண்டும்.

மேலும், முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21வது நாள் என, நான்கு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். இது போன்ற தொடர் சிகிச்சைகளை தவற விடுவோருக்கு, ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயமாக உள்ளது. எனவே, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற்றால், ரேபிஸ் பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us