sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போலீஸ் செய்திகள்

/

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

 போலீஸ் செய்திகள்


ADDED : டிச 24, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி மாயம்

சாத்துார்: குருலிங்கபுரம் கருப்பசாமி,55. இவரது மகள் 17 வயது சிறுமி விருதுநகரில் இன்ஜினியரிங் படித்து வந்தார். டிச.21 கல்லுாரி சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர். இரவு 7:00 மணிக்கு மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மினி பஸ்சில் இறந்து கிடந்த வாலிபர்

மதுரை நரிமேடு மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் 35. சிவகாசி பாரைப்பட்டியில் உள்ள ஒர் க் ஷாப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் ஒர் க் ஷாப் அருகே வேலைக்கு வந்திருந்த மினி பஸ்சிற்குள் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை 3 பேர் மீது போக்சோ

சாத்துார்: அமீர் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா, 22. 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.பெற்றோருக்கு கண்டித்ததால் சிறுமி அவருடன் பேசுவதை தவிர்த்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா இவரது நண்பர்கள் கண்ணன் 22, மாரிக்கண்ணன்24.ஆகியோருடன் அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று தன்னுடன் பேசுமாறு மிரட்டினர். 3 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

உண்டியல் திருட்டு

அருப்புக்கோட்டை: பாலையம்பட்டி கரிசல் கண்மாய் இருளப்பசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவில் கேட்டை உடைத்து 2 உண்டியல்களை திருடி சென்றனர். பூஜாரி மங்கையன் புகாரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us