ADDED : ஆக 29, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: வணிக வளாகத்தில் ஏற் பட்ட தீ விபத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சே தமானது.
திருச்சி, ஒத்தக்கடை பகுதியில் உள்ள வணிக வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
நேற்று காலை, 10:00 மணியளவில், இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில், ஒரு அறையில் இருந்து புகை வந்தது.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதமானது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.