நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவர் தற்கொலை
தேவதானப்பட்டி: அருகே நாகம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 64. கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்தாண்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காலில் பிளேட் வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கால் வலி ஏற்பட்டது. இதனால்விஷம் குடித்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர், மாரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.