sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்

/

திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபரானார் சபாபதி தம்பிரான்


ADDED : ஆக 29, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்; திருப்பனந்தாள் காசி மடத்தின், 22வது அதிபராக சபாபதி தம்பிரான், பீடம் ஏறும் வைபவம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் காசி மடத்தின், 21வது அதிபராக இருந்த முத்துக்குமார சுவாமி தம்பிரான், 95, கடந்த ஆக., 19ல் பரிபூரணமடைந்தார்.

இதையடுத்து, சபாபதி தம்பிரான், 34, நேற்று, 22வது அதிபராக பீடம் ஏறும் வைபவம் நடைபெற்றது. காசிமடத்தின், 22வது அதிபராக பொறுப்பேற்ற ஸ்ரீமத் சபாபதி தம்பிரானின் இயற்பெயர் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர், 2021ல், காசி மடத்தின் ஸ்ரீ காரியமாக ஓராண்டும், இளவராக நான்கு ஆண்டும் பொறுப்பேற்றார்.

தருமை ஆதீனம், 27வது குரு மகா சன்னிதானம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றவர். சபாபதி தம்பிரானுக்கு புனித நீரால், தருமை தம்பிரான் கட்டளை சுவாமிகளால், அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, 22வது அதிபராக அஷ்டலெட்மி கட்டில் ஞானபீடம் ஏறினார். பின், மாகேசுவர பூஜையும், 22வது அதிபரின் வீதியுலா, அஷ்டலெட்சுமி கட்டில் கொலு காட்சியளித்து, அருளாசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us