/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ஜே.சி.பி., டிரைவர் அடித்துக்கொலை
/
ஜே.சி.பி., டிரைவர் அடித்துக்கொலை
ADDED : ஆக 19, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்; தொழில் போட்டியால் ஜே.சி.பி., டிரைவரை அடித்து கொலை செய்த டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்தவர் குமார், 36. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் இமானுவேல், 29, என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இமானுவேல், மண்வெட்டியால் குமாரை தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். வேதாரண்யம் போலீசார், இமானுவேலை கைது செய்தனர்.