ADDED : ஆக 25, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுா : மேலவலசை மலையம் பெருமாள் சுவாமி ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புரவி எடுப்பு நிகழ்ந்தது.
குதிரை பொட்டலில் இருந்து புரவிகள் மந்தை கருப்பணசாமி கோயில் முன் உள்ள பொட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மாலை அங்கிருந்து புரவிகளை ஒரு கி. மீ., தொலைவில் உள்ள மன்ற மலையின் மீது உள்ள மலையம் பெருமாள் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.