ADDED : ஆக 25, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன் கோயிலில் நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு கிருஷ்ணர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.