/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு
/
குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு
ADDED : ஆக 25, 2025 02:42 AM
திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் செப். 2ல் புறப்படுகிறார்.
அத்திருவிழாவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பாண்டியராஜாவாக பங்கேற்பார். அதற்காக அவர் தெய்வானையுடன் செப். 2 காலையில் கோயிலில் இருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றடைவார்.
அங்கு திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செப். 7ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் திரும்புவர்.
இந் நாட்களில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, பூஜை நடைபெறும். தங்க ரத புறப்பாடு மட்டும் ரத்து செய்யப்படும்.