sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

/

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : செப் 07, 2025 05:35 AM

Google News

ADDED : செப் 07, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம் சதுர்த்தசியையொட்டி சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.

ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு நடத்தும் தேன் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிவகாமி அம்மாள் உடனுறை நடராஜருக்கு, மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதிநாட்கள் என ஓராண்டிற்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

அதன்படி, ஆவணி மாதம், அவிட்ட நட்சத்திரம், சதுர்த்தசி தினமான நேற்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நடராஜர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்புச்சாறு, இளநீர் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நடராஜர் சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்திருந்தனர். கோவில் எழுத்தர் விமல் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us