ADDED : செப் 07, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜிவ்காந்தி மகன் விஜய், 24; தனது வீட்டிற்கு அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து விஜயை போலீசார் கைது செய்தனர். ஒரு குவாட்டர் மதுபாட்டில் மற்றும் ரூ.1,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.