/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்
/
தரிசா கிடக்கும் நிலம்; ஏங்கும் ஏழைகள் மனம்
ADDED : டிச 23, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மத்திய மாவட்ட செயலர் யுவராஜ் தலைமையிலான கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: கோபி தாலுகா சிறுவலுார் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்-கப்பட்ட நிபந்தனை நிலங்கள் உள்ளன.
அந்நிலங்கள் எவ்வித பயன்பாடும் இல்லாமல் தரிசாக உள்ளன. இக்கிராமத்தில் வீட்டு-மனை வேண்டி பல முறை மக்கள் மனு வழங்கி உள்ளனர். இந்த நிலங்களை, வீடற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு-மனை பட்டாவாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

