/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு குறைதீர் முகாம் ஏற்பாடு
ADDED : டிச 23, 2025 08:23 AM
ஈரோடு: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்-பீடு வாடிக்கையாளர் தேவை, சந்தேகங்களுக்காக சிறப்பு குறைதீர் முகாம், ஈரோடு அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, பவானி, கோபி தலைமை அலுவலகங்களில், இன்று முதல் வரும், 31 வரை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
பெயர், முகவரி, பிறந்த தேதி திருத்தம், கைபேசி எண் மாற்றம், சேர்த்தல், வாரிசு மாற்றம், சேர்த்தல், பிரீமியம் செலுத்தும் முறை மாற்றம், பாலிசி காலம், தொகை குறித்த மாற்றங்கள், பாலிசி புதுப்பித்தல், கே.ஒய்.சி., ஆவ-ணங்கள் இணைப்பு, கடன் தேவைகள், பிரீமியம் ரசீது புத்தகம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். உரிய ஆவணங்களுடன் பங்-கேற்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

