/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டு குடிநீர் வழங்க மக்கள் வலியுறுத்தல்
/
கூட்டு குடிநீர் வழங்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2025 08:22 AM
ஈரோடு: பெருந்துறை தாலுகா சுள்ளிப்பாளையம், சக்தி நகர், லட்சுமி-புரம், ஐயப்ப நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக-த்தில் மனு வழங்கி கூறியதாவது: எங்களது பகுதியில், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீடுகளில், 5,000 வீடுகளுக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எங்களைப்போன்று, 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்க-வில்லை. ஆனால், அதற்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் குடிநீர் குடிக்க, சமைக்க பயன்படுத்த சிரமமாக உள்ளதால், கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் இணைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

