sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

/

நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

நாயை பிடிக்க உத்தரவு: மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி, ஒரு நாய்க்கு ரூ.110 செலவு

17


UPDATED : ஆக 14, 2025 10:39 AM

ADDED : ஆக 14, 2025 07:24 AM

Google News

17

UPDATED : ஆக 14, 2025 10:39 AM ADDED : ஆக 14, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாய்க்கு ரூ.110 வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டில்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களில் 6 முதல் 8 வாரங்களில் 5 ஆயிரம் நாய்களை காப்பகத்திற்கு மாற்ற வேண்டும். உடனடியாக பிடிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவால் பணப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட டில்லி மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும் என மாநகராட்சியின் முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

உணவு, போக்குவரத்து, சுத்தம் செய்தல், மருத்துவ பராமரிப்பு மற்றும் வேலையாட்களுக்கு சம்பளம் என ஒரு நாய்க்கு தினமும் ரூ.110 செலவாகும்.

டில்லியில் உள்ள 10 லட்சம் தெருநாய்கள் அனைத்தும் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.11 கோடி செலவாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது டில்லி மாநகராட்சி தினமும் 350க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை செய்து, 10 நாள் கண்காணிப்புக் காலத்திற்கு பிறகு விடுவிக்கிறது. கருத்தடை செயல்முறைக்கு ஒரு நாய்க்கு ரூ.ஆயிரம் செலவு ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us