sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

/

பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி

5


UPDATED : ஆக 14, 2025 08:11 AM

ADDED : ஆக 14, 2025 07:33 AM

Google News

5

UPDATED : ஆக 14, 2025 08:11 AM ADDED : ஆக 14, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி: பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடந்த கொண்டாட்டத்தின் போது, வான்வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கராச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, 8 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோல, கோரங்கி, லையரி, மெஹ்மூதாபாத், அக்தர் காலனி, கேமரி, ஜேக்சன், ஓரங்கி டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற கொண்டாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 42 பேர் வான்வழி துப்பாக்கிச்சூட்டுக்கு உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பகுதியில் ஹசன் கேல் போலீஸ் ஸ்டேஷன் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், போலீஸ்காரர் அபு பக்கர் என்பவர் உயிரிழந்தார். மேலும், ஒரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.








      Dinamalar
      Follow us