/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்
/
2024 மார்ச் - ஏப்ரலில் நடந்த நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
மார்ச்8: வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு.
மார்ச்14: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு.
மார்ச்22: அமைச்சர் பொன்முடியின் மூன்றாண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைப்பு. மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார்.
மார்ச்27: ஈரோடு ம.தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை.
ஏப்.4: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 35 ஆண்டுக்குப்பின் இலங்கை சென்றனர்.
ஏப்.6: விக்கிரவாண்டி, தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி 71, காலமானார்.
ஏப். 7: சென்னை - நெல்லை ரயிலில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 4 கோடி சிக்கியது.
ஏப்.19: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஏப்.30: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சாத்துார் விரைவு நீதிமன்றம்.
இந்தியா
மார்ச்9: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா.
*சர்வதேச போதை கடத்தல் வழக்கில் தி.மு.க., பிரமுகரான ஜாபர் சாதிக், டில்லியில் கைது. கட்சியில் இருந்து நீக்கம்.
மார்ச்10: மும்பையில் நடந்த உலக அழகி போட்டியில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வென்றார்.
மார்ச்12: ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப்சிங்சைனி பதவியேற்பு.
மார்ச்14: தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பா.ஜ., ரூ.6000 கோடி, காங்., ரூ.1421 கோடி, தி.மு.க., ரூ.639 கோடி நிதி பெற்றன.
*தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு.
*புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய்க்கு தடை.
மார்ச்19: புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.
மார்ச்21: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது.
ஏப்.3: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ., வில் சேர்ந்தார்.
ஏப்.16: சத்தீஸ்கரின் கெங்கரில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை.
ஏப்.21: 'துார்தர்ஷன்' சேனலுக்கு காவி நிற புதிய லோகோ.
ஏப்.23: மேற்கு வங்கத்தில் முறைகேடு காரணமாக 26 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செல்லாது என கோல்கட்டா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஏப்.26: ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏப்.30: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா, ம.ஜ.த., கட்சியிலிருந்து சஸ்பெண்ட்.
உலகம்
மார்ச்1: பின்லாந்து பிரதமராக அலெக்ஸாண்டர் ஸ்டுப் பதவியேற்பு.
*வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடத்தில் தீ. 47 பேர் பலி.
மார்ச்3: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பு.
மார்ச்4: கருக்கலைப்பு அவரவர் உரிமை என பிரான்சில் சட்டம் நிறைவேற்றம்.
மார்ச்7: 'நேட்டோ' அமைப்பில் 32வது நாடாக இணைந்தது சுவீடன்.
மார்ச்13: உலகின் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் ஐரோப்பிய யூனியனில் நிறைவேற்றம்.
மார்ச்20: மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம்.
மார்ச்23: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐ.எஸ்., அமைப்பு தாக்குதல். 144 பேர் பலி.
மார்ச்24 : பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்காக 'கீமோதெரபி' சிகிச்சை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
ஏப்.1: காங்கோவின் முதல் பெண் பிரதமராக ஜூடித் துலுகா பதவியேற்பு.
ஏப்.2: எகிப்து அதிபராக அப்டெல் படாஹ் அல் சசி, மூன்றாவது முறையாக பதவியேற்பு.
*போர்ச்சுக்கல் பிரதமராக லுாயிஸ் மான்டெங்ரோ பதவியேற்பு.
ஏப்.4: வெனிசுலாவை சேர்ந்த உலகின் வயதான ஜூவான் விஜென்டி பெரெஷ் மோரா 114, காலமானார்.
ஏப்.11: அயர்லாந்து பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்பு.
ஏப்.13: இந்தியாவுக்கான பிரிட்டன் முதல் பெண் துாதராக லின்டி கேமரான் பதவியேற்பு.
ஏப்.29: உலகில் நீண்டகாலம் (20 ஆண்டு) பதவி வகிக்கும் பெண் பிரதமரானார் வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா.
ஓட்டலில் குண்டு
மார்ச்1: பெங்களூருவின் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பு. 8 பேர் காயம்
புதுமை பயணம்
மார்ச்5 : நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து கோல்கட்டாவில் துவக்கம்.
இணைப்பு
மார்ச்12: சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்தது.
நொறுங்கிய பாலம்
மார்ச்26: சரக்கு கப்பல் மோதியதில் அமெரிக்காவின் பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் விழுந்தது. அதன் மேல் சென்ற வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதில் 9 பேர் பலி.
சென்னை மாணவர்
மார்ச்27: மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்பேஸ் பிரிவுக்கு தலைவராக சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் பவன் டவுலுாரி பதவியேற்பு.
டாப் - 3
மார்ச் 5: கல்பாக்கத்தில் ஈணுலை உற்பத்தியை பிரதமர் மோடி துவக்கினார்.
மார்ச் 11: இந்திய குடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ., ) அமலுக்கு வந்தது.
மார்ச் 15: ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக பதவியேற்பு.