sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

மண் கண்ட தெய்வம்!

/

மண் கண்ட தெய்வம்!

மண் கண்ட தெய்வம்!

மண் கண்ட தெய்வம்!


PUBLISHED ON : ஜன 14, 2025

Google News

PUBLISHED ON : ஜன 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இது

கதிரவனை

வரவேற்க

நட்சத்திரங்களைப்

புள்ளிகளாக்கி

மின்னல்களை

கோடுகளாக்கி

தாவணி நிலாக்கள்

தரையில் கோலமிடும்

தைத் திருநாள்

* வீடுகளும்

பொங்கலுக்கு

கட்டும் புத்தாடை!

சுவர்களின்

ஆடை தானே

சுண்ணாம்பு!

* மண்ணிற்கும்

மனிதர்களுக்கும்

நடக்குமிந்த

மகரந்த சேர்க்கையில்

பானைகளில்

பால் பூக்கும்!

* இது

கால்நடைகளை

கவுரவப்படுத்தும்!

உழுவதற்கு

மட்டுமல்ல

தொழுவதற்கும்

என்று!

* காளைகளுக்கும்

பசுக்களுக்கும்

கழுத்தில்

பிடறி முளைக்கும்!

* நம்மை வளர்ப்பது

பெண்ணில் கருப்பை

மண்ணில் கலப்பை

பொங்கல் உணர்த்தும்

இந்த நினைப்பை!

* நாம் கூட

தசைகளால் ஆன

தாவரங்கள் தான்!

* நாமும்

விதைக்கப்படுகிறோம்!

விதைகளை

மூடத்தான்

நம் அன்னையர்

மசக்கையாய்

இருக்கையில்

மண்ணை

உண்கிறார்கள்!

* தாயின் வயிற்றில்

தண்ணீருக்குள் தான்

இருந்தோம்!

* அங்கே

வேண்டியதை

உண்டோம்

வேர்கள் வழி!

தோற்றத்தில்

வேர்கள் தானே

தொப்புள் கொடியும்!

* தடவிப் பாருங்கள்

நம்மிலும்

தண்டுவடமுண்டு!

* கனிகளுக்கும் நமக்கும்

காலம் காலமாகத் தொடர்பு!

* ஆப்பிளைக்

கடித்ததிலிருந்து

ஆரம்பமானது

வாழ்க்கை!

* இயற்கைக்கும்

நமக்கும்

இறைவனே

உழவர்கள்!

* கண்கண்ட தெய்வம்

போல

அவர்கள்

மண்கண்ட தெய்வம்!

* தன்னைப் பிழிந்து

மண்ணை

நனைக்கிறவர்கள்

* வயிற்றில் சுமக்கும்

அன்னையைப் போல

நம்மை வயலில்

சுமப்பவர்கள்!

* கலப்பை கொண்டு

இரைப்பை நிரப்புவர்கள்!

* இயற்கையையும்

உழவர்களையும்

இன்றே

வணங்குவோம்!

கையைக்

குவித்தல்ல

வாழ்க்கையைக்

குவித்து!

- கவிஞர் நெல்லை ஜெயந்தா






      Dinamalar
      Follow us