பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்தாரா மல்லிகா ஷெராவத்?
ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 20 நிகழ்ச்சி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சீசன் செப்டம்பர் 6 முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்டியாளராக கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தற்போது அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், பிக்பாஸ் என்பது ஒரு நடிகையாக எனது எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமான மேடை இல்லை என்பதால் அதை நான் தவிர்த்து வந்துள்ளேன். என்றாலும் ஒவ்வொரு புதிய சீசன் தொடங்கும்போதும் நான் இதுபோன்ற வதந்திகளில் அடிபட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.
அதேசமயம், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரியாலிட்டி டிவிக்குத் திரும்பும் மல்லிகா, தற்போது தி டிரைட்டர்ஸ்- 2 நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாராகி வருகிறார். ஒரு ரியாலிட்டி ஷோவிலிருந்து தான் எதிர்பார்த்த விஷயங்களுக்கு இந்த நிகழ்ச்சி சரியாகப் பொருந்தியதாலேயே இதைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.