உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விபத்தில் சிக்கியது கடவுள் கொடுத்த ஓய்வு : ராஷ்மிகா நெகிழ்ச்சி

விபத்தில் சிக்கியது கடவுள் கொடுத்த ஓய்வு : ராஷ்மிகா நெகிழ்ச்சி

பாலிவுட் படங்களில் பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது 'மைசா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகாவை மையமாக கொண்டு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் படம். இதில் அவர் மலைவாழ் மக்களுக்காக போராடும் வீராங்கணையாக நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பில் ஆக்ரோஷமான நடன காட்சியில் நடித்தபோது இடுப்பு தசை பிசகி அதற்கான சிகிக்சை எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட 3வது காயம் இது. எனது உடல் ஒரு மனித உடல், மெஷின் அல்ல என்பதைப் போல நான் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். 'மைசா' படத்தின் நடனப் படப்பிடிப்பின் போது, எனது வலது இடுப்பு பகுதியில் காலையும் இடுப்பையும் இணைக்கும் நான்கு முக்கியத் தசை நார்களில் ஒன்று விலகிவிட்டது.

அது மீண்டும் சரியாக இணைந்தால் மட்டுமே என்னால் காலைத் தூக்க முடியும். வலி இருந்தாலும் அது தாங்க முடியாதது அல்ல. தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே இதைக் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !