
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட, இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.
* நீங்கள் செய்த நன்மைகளை சிந்திப்பதை விட, உங்களால் நிகழ்ந்த பாவங்களைச் சிந்தியுங்கள்.
* நீங்கள் உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* உப்பை நீர் கரைப்பது போல, நற்குணம் பாவங்களைக் கரைத்து விடும்.
* உன் வாயிலாக ஒரு மனிதனுக்கு நன்மை நடந்தால், உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகிறாரோ அவர் இறைவனைத் துன்புறுத்தியவர் ஆவார்.
-பொன்மொழிகள்