
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நன்மையான செயல்களை செய்து வாழ்பவனே பாக்கியவான்.
* உங்களது நடத்தையே உங்களை கவுரவப்படுத்தும்
* சொல்லும் வார்த்தைகளில் மென்மை இருக்க வேண்டும்.
* யாரும் சொல்லித்தராத பாடங்களை அவமானம் கற்றுத் தரும்.
* வெறுப்பு உண்டாகும் செயலை ஒரு போதும் செய்யாதே.
* கவுரவத்திற்காக வாழும் வாழ்க்கை போலித்தனமானது.
* நீ செல்லும் பாதையில் முட்கள் கிடந்தால் விலகாதே. அதை ஓரமாக
அப்புறப்படுத்தி செல்.
* எதுவும் உன்னுடையது அல்ல இறந்தவுடன் எதுவும் கொண்டு போகப்போவதில்லை.
* சகவாசம் யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீயே முடிவு செய்.