ஒரு தந்தை தன் மகனைத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தார். ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்...
* தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
* பொறாமையில் இருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
* பறவைகள், தேனீக்கள், சூரியன், செடிகள், மலர்கள் என எல்லாவற்றையும் ரசிக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
* பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்பதை புரிய வையுங்கள்.
* சுயமாக சிந்திக்கச் செய்யுங்கள்.
* மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளச் செய்யுங்கள்.
* குற்றம் குறை கூறுபவர்களை அவன்
அலட்சியப் படுத்தட்டும்.
* அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
* தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை செய்ய வேண்டும்.
* எதையும் போராடி பெறுவதில் நிறைவு உள்ளது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள் என்றார். அவர் தான் ஆபிரகாம் லிங்கன்.