/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
/
சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்
நவ 20, 2024

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் நவம்பர் 16 ஆம் தேதி ஸ்ரீ ஐயப்பன் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்பன் சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பதினெட்டாம் படி அலங்காரம் ஜெகச் ஜோதியாக விளங்கியது. காலையில் மூல மந்திர ஹோமமும் நெய் அபிஷேகமும் மனங்குளிர நடைபெற்றன. மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனையும் படி பூஜையும் மெய்சிலிர்க்க வைத்தன. ஐயப்பமார்களின் பஜனை உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
“ சுவாமியே சரணம் ஐயப்பா... “ என்ற சரண கோஷம் விண்ணைப் பிளந்தது. பெருந்திரளான ஐயப்பமார்கள் பங்கேற்றமை பெரு மகிழ்வைத் தந்தன. ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement