/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆங்கில புத்தாண்டு நல் அருள் ஆசி
/
மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆங்கில புத்தாண்டு நல் அருள் ஆசி
மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆங்கில புத்தாண்டு நல் அருள் ஆசி
மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் ஆங்கில புத்தாண்டு நல் அருள் ஆசி
டிச 31, 2024

“ எண் திசைக்கும் தென் திசையே மூலம். தென் திசை மொழியே உயிர்க் குலத்தின் முதல் மொழி.உயிர்க் குலத்தின் முதல் மொழியாம் தமிழே ஞாலம் ஆளும் நற்றமிழ் மொழி. தமிழ் மக்களின் மூலம் பாரதமும், பாரத்தின்வழி வையகமும் அனைத்து வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெற்று சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் பெறட்டும். தமிழகத்திலிருந்து தோன்றும் நல்லெண்ண அலைகள் வையகம் முழுதும் பரவட்டும் .”
' வேந்து பகை தணிக. பசி இல் ஆகுக. பிணி சேண் நீங்குக “ எனும் முது மொழி புது மொழியாகி உலகப் பொது மொழியாக மலரட்டும் “ போரில்லா உலகம், பசியில்லா சமுதாயம், பிணியற்ற வையகம் உருவாகட்டும் .வளமான தமிழகம், வலிமையான பாரதம், அமைதியான உலகம் செழிக்கட்டும் “ என திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர் ஞான பிடாதிபதி பொற்கலசப் பிரணவாலயப் பேராசான் ஜெகத் குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் தமது ஆங்கிலப் புத்தாண்டு நல்லருளாசியில் தெரிவித்துள்ளார்.
' 2025 -இல் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள், உலகிடை மூளும் போரச்சங்கள் யாவும் நீங்கட்டும். மக்கள் மனங்களில் அமைதி நிரம்பட்டும். எது நிகழ்வினும் நன்மைக்கே என ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தால் இனி நிகழ்வன யாவும் நன்மையாகவே அமையும். 2024 இல் நடந்ததெலாம் நன்மைக்கே - 2025 இல் நடக்கப்போவதெலாம் நன்மைக்கே. எல்லோரும் எல்லாம் பெற்று வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெற்று சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்நிறை வையகம் பிறக்கட்டும்.
' இவையனைத்தும் குறைவறப் பெற குரு அருள் பொழியட்டும். எல்லாம் வல்ல குருவின் பேரருள் பெருங் கருணையினால் 2025 ஆங்கிலப் புத்தாண்டில் உலக மாந்தர் அனைவரும் மன வளமும் பொருள் வளமும் மெய்ஞானமும் மெய்க் கீர்த்தியும் பெற்று குடும்பத்தாரோடும் உற்றார் உறவினரோடும் ஊரோடும் உலகத்தோடும் இணங்கி வாழப் பரிபூரண நல்லாசிகள். எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழும் ஓருலக சமதர்ம சமத்துவ ( இறையாட்சி ) நல்லாட்சி மலரப் பரிபூரண நல்லாசிகள்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement