/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்
/
ஆக்லாந்தில் நவராத்திரி கொண்டாட்டம்

இந்த வருடம்  ஆக்லாந்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நிறைய வீடுகளில் கொலு வைத்து குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் புரியும்படி நவராத்திரியின் சிறப்பை எடுத்து சொல்லி கொண்டாடினர்.  
ஆலயங்களிலும் கொலு வைத்து  துர்க்கா லட்சுமி சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.  தமிழ் மக்கள் மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். 
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நமது இந்திய கலாச்சாரம் சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது என்று உணரும் நல்ல பண்டிகை நவராத்திரி பண்டிகை.  
ஒன்பது நாட்களும் ஒவ்வொருவர் வீட்டிலும் லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பஜனைகள் பாடப்பட்டு எல்லோருக்கும் பிரசாதம், வெற்றிலை பாக்கு,  குங்குமம் மற்றும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டது. பிரியா ஸ்ரீனிவாசன், சுகன்யா பிரேம்நாத், அலமேலு ராகவன், புவனா வெங்கட்ராமன், ஹரிணி முரளீதரன், ஜெயந்தி சுந்தரேசன்,  துளசி வால்மீகி, வித்யா மோகன் மற்றும் சுஜாதா கோபால்  வீடுகளில் சிறப்பாக கொலு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வருடமும்  ஜெயந்தி விதம் விதமான வடிவில் கொலு அமைப்பார்கள். இந்த வருடம் ஸ்ரீ துர்கா மாதா அமைத்திருந்த விதம் எல்லோரையும்  கவர்ந்தது.                - ஆக்லாந்தில் இருந்து நமது செய்தியாளர் சந்திரா சங்கரன். 
Advertisement

