sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

நாளை உலக புகைப்பட தினம்

/

நாளை உலக புகைப்பட தினம்

நாளை உலக புகைப்பட தினம்

நாளை உலக புகைப்பட தினம்

1


PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளை உலக புகைப்பட தினம்மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி கண்காட்சி நடத்துகிறது.Image 1457813சென்னையில் உள்ள பழமையான புகைப்பட அமைப்பான 'மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியும்',ஜெய்கோபால் கரோடியா போட்டோ ஜர்னலிசம் அகடாமியும் இணைந்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (19/08/2025)புகைப்படக் கண்காட்சியினை நடத்துகின்றனர்.Image 1457814சர்வதேச புகைப்பட தினம் என்பது கேமராவின் பின்னால் இருக்கும் படைப்பாளிகளை கவுரவிக்கும் நாளாகும். “ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்ற பழமொழியை உண்மையாக்கும் புகைப்படங்களை கொண்டாடும் நாளும் இதுவே.Image 1457818புகைப்படக் கலை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, மனிதர்களின் நினைவுகள், வரலாறு, கலாச்சாரம், மற்றும் உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது.Image 1457816Image 1826-ல் பிரான்சில் ஜோசப் நிசேபோர் நியெப்ஸ் என்பவர் 'ஹெலியோகிராபி' எனப்படும் முறையில் உலகின் முதல் புகைப்படத்தை எடுத்தார்.

பின்னர் லூயி டாகியர் உருவாக்கிய டாகியரோடைப் முறை 1839-ல் பொதுவாக அறிவிக்கப்பட்டது.Image 1457817அதனால், 1839 ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிரான்ஸ் அரசு இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு பரிசாக அறிவித்தது. அந்த நாளே உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி தனது உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களுடன் கண்காட்சி நடத்தி கொண்டாட திட்டமிட்டுள்ளது.Image 1457815சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளி வளாகத்தில் 29 உறுப்பினர்கள் எடுத்த 125 புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது.வைல்டு லைப்,போட்டோ ஜர்னலிசம்,பேர்ட்ஸ் போட்டோகிராபி,லேண்ட்ஸ் போட்டோகிராபி,ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி என்று பல்வேறு தலைப்புகளில் படங்கள் இடம் பெற்றுள்ளது.கல்லுாரிகளில் விஷ்வல்கம்யூனிகேஷன் படிப்பு படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு இந்த புகைப்படங்கள் பாடமாக இருக்கும்.

இந்த கண்காட்சி நாளை மாலை 5 மணிக்கு சென்னையின் மூத்த புகைப்படக்கலைஞர் ஜெயானந்த கோவிந்தராஜ் திறந்துவைக்கிறார்.கண்காட்சி தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை வரை நடைபெறும், துவக்க நாளிலும்,தொடர்ந்து பள்ளி நாட்களிலும்(10-5) பார்வையாளர்கள் கண்காட்சியைக் காண இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

மேற்கண்ட தகவலை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் அழகானந்தம்,மற்றும் அசோக் கேடியா தெரிவித்துள்ளனர்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us