PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

நமக்கு தெரிந்து எல்லாம் பசும்பால்,மகாத்தமா சாப்பிட்டதால் ஆட்டுப் பால்,அதிகம் காபி டீ போட கடைகளில் பயன்படுத்தும் எருமைப்பால் எப்போதாவது மருத்துவ பயன்பாட்டுக்கு என்று செய்திகளில் அடிபடும் கழுதைப்பால் மட்டுமே.
உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் பெருகிவருவதாலும்,நவீன வாழ்க்கை முறையில் இயற்கை உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதும் கேமல் மில்க்கிற்கு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.
இப்போது சில நாடுகள் ஒரு படி மேலே போய் கேமல் மில்க்கால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்,சாக்லெட்,பவுடர் பானங்களை தயாரித்து வருகின்றனர் அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் தனி சந்தையே உருவாகிவருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுற்றுச்சுழலை கெடுக்காமல் மேயக்கூடியதும்,குறைந்த நீரில் அதிக காலம் வாழக்கூடியதுமான ஒட்டகத்தை வளர்ப்பதிலும் மேய்ப்பதிலும் சிரமம் அதிகம் இல்லை என்பதால் ஆப்பிரிக்கா நாடுகள் ஒட்டக வளர்ப்பில் நிறைய அக்கறை காட்டிவருகின்றன.
இத்தனை நன்மைகள் இருக்கின்றன என்பதை அறியாமல் எளிதாக கிடைக்கிறது என்பதால் ராஜஸ்தான் பகுதிகளில் நம்மவர்கள் நீண்ட காலமாக கேமல் மில்க் பயன்படுத்தியே வருகின்றனர்,இனி இது நாடு முழுவதும் பரவலாகும்.