இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.