கோவை ஆர். எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் மேற்காசிய பிராந்தியத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப உலக நன்மை ஏற்பட ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடந்தது.
கடும் கோடை வெயிலும், வினியோக நெருக்கடியும் நிலவி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமையல் காஸ் சிலிண்டர்களை நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகம் இதுவரை கண்டிராத அரசியல் வினோதம்…! சென்னையில் நேற்று தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு வேனில் திரும்பிய தவெக தலைவர் விஜயை, தவெக, காங், விசி கட்சியினர் கொடியசைத்து வரவேற்று மகிழ்ந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலுக்கு இடையே பயணித்த மக்கள்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.
பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.