
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.
04-Feb-2026
இன்றைய போட்டோ13-Apr-2026
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் இணைப்பு மேம்பாலம், உள்வாங்கியது. இன்டர் லாக் முறையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் அகற்றப்பட்டதுடன், முதல் கட்டமாக சுமார் 240 அடி தூரம், சாலை ஒட்டுமொத்தமாக பெயர்ந்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.
13-Apr-2026
8/இன்று இதற்குத்தான் மதிப்பு அதிகம்.! அரசியல்வாதிகள் முதல் அடிமுதல் தொண்டன் வரை ஆசை கொள்வது இந்த நாற்காலிகளுக்குதான். மாநாடு என்றாலும் மக்கள் கூடும் இடம் என்றாலும் முதலில் நாற்காலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிசையாக அடுக்கி விடுவர். மழையோ, வெயிலோ குடையாகும், நிற்கவும், உடைக்கவும் கூட உதவும் கட்சி தொண்டர்களுக்கு. அதனை உணர்ந்த வியாபாரி ஒருவர் லாரிகளில் வரிசையாக சேர்களை அடுக்கி எடுத்துச் செல்கிறார். இடம்: மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, சாய்பாபாகோவில், கோவை
13-Apr-2026







