மார்கழி மாதம் 27ம் நாள் மார்கழி கூடாரை பாசுர வைபவத்தை முன்னிட்டு, ஊட்டி பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீதா பிராட்டி ஸ்ரீ ஆண்டாள் ஆகவும், ஸ்ரீராமர் ஸ்ரீ ரங்க மன்னார் ஆகவும் எழுந்தருளி மாலை மாற்றல் வைபவமானது வெகு சிறப்பாக நடந்தது.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.திமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சுக்கு, நினைவுப் பரிசை வழங்கிய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார். இடம்: வில்லிவாக்கம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.