மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
உலக மலை ரயில் பாரம்பரிய தின நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்தது. இந்த நாளில் மலை ரயிலில், ஊட்டிக்கு மகிழ்ச்சியில் செல்லும் சுற்றுலா பயணி.
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.