தை மாதத்தை வட மாநிலத்தவர்கள், மகர மாதம் என்று அழைக்கின்றனர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவர். அவர்களின் வசதிக்காக, கங்கை மீது தற்காலிக மிதவைப் பாலங்கள் கட்டும் பணி இப்போதே துவங்கி விட்டது.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இடம்: காந்திபார்க், கோவை.
ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.