சீக்கிய சமயத்தின் நிறுவனர் குரு நானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் 'நகர் கீர்த்தன்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற சிறுவர்கள், பக்தி பாடல்களை பாடினர்.
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.