டில்லி செங்கோட்டை முன், 'எனது டில்லி; எனது நாடு- ஒற்றுமையான இந்தியா, தன்னிறைவு இந்தியா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி