காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.