கடந்த மாதம் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி துவங்கிய நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் சீரமப்பட்டு வருகின்றனர். இடம்: கூடப்பாக்கம்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.