திருவாலங்காடு ஊராட்சி அம்பேத்கர் நகரில் கழிவுநீர் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.