சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டை சுத்தம் செய்வது காய்கறிகளை நறுக்குவது, மலர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் ரிச்பர்க் பகுதியில் உள்ள மையத்தில் காட்டுத்தீ குறித்து ஒரு முக்கிய ஆய்வு நடைபெற்றது. காட்டுத்தீ ஏற்படும் போது குடியிருப்புகளை தீ விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தரவுகளை சேகரிக்க இந்த சோனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவைப்படும் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. இடம்: பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.கே.நகர், சென்னை.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், அதிக பனிப்பொழிவு காரணமாக குளிர் காலங்களில் மூடப்பட்டு கோடை காலங்களில் திறக்கப்படும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, கேதார்நாத் கோவில் இன்று திறக்கப்பட உள்ளது.
கடும் கோடை வெயிலும், வினியோக நெருக்கடியும் நிலவி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமையல் காஸ் சிலிண்டர்களை நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகம் இதுவரை கண்டிராத அரசியல் வினோதம்…! சென்னையில் நேற்று தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு வேனில் திரும்பிய தவெக தலைவர் விஜயை, தவெக, காங், விசி கட்சியினர் கொடியசைத்து வரவேற்று மகிழ்ந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலுக்கு இடையே பயணித்த மக்கள்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.